districts

img

வடசென்னையில் நலவாரிய அலுவலகம் அமைத்திடுக சிஐடியு ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 25-

    வடசென்னையில் நலவாரிய அலுவல கம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  வடசென்னை மாவட்டக்குழு சார்பில் மிண்ட் பேருந்து நிலையம் அருகே செவ்வாயன்று (ஜூலை 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   அமைப்புசாரா, தையல், ஆட்டோ, மோட்டார், கட்டுமான தொழிலாளர் அனை வருக்கும் வழங்க வேண்டிய பணப்பயன் களை உடனடியாக வழங்க வேண்டும்,  அனைத்து நல வாரிய உறுப்பினர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பெண் தொழிலாளருக்கு பென்சன் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி 55 வயது முதல் வழங்க வேண்டும்,  நல வாரிய மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தை மாதம் தோறும் முறையாக கூட்ட  வேண்டும், வடசென்னையில் நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலா ளர் சு.லெனின்சுந்தர், மாநிலக்குழு உறுப்பி னர் மணிமேகலை, நிர்வாகிகள் கோவிந்த சாமி, டி.வெங்கட், லூர்துசாமி, ஜெய கோபால், கே.ரவிச்சந்திரன், எஸ்.பவானி, மீனவர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.லோகநாதன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.