தொழிற்சங்கம் வைக்கும் உரிமையை மறுத்து வரும் தமிழக அரசின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை எதிரே சிஐடியுசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர் பிரபுராஜ் தலைமையில் சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம்,மாநிலக் செயற்குழு உறுப்பினர் பெருமாள், சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் முருகன் ராமசாமி, கொளஞ்சியப்பன், கலியன், மதிவாணன், தினேஷ்குமார், மணவாளன்,வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.