districts

img

தொழிலாளர் விரோத போக்கு சிஎம்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப்.1 – வேலூர் சிஎம்சி மருத்துவமனையில், அதன் நிறுவனர் ஐடா ஸ்கடர் பெயரில் அன்னை ஐடா ஸ்கடர் சிஎம்சி மருத்துவ மனை தொழிலாளர்கள் சங்கம் கடந்த 1968 இல் தொடங்கப்பட்டது.  இந்த நிலையில், ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் சிஎம்சி மருத்துவமனை யின் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும், தொழி லாளர்களை பணி நிரந்தரம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் வேலூர் மாநகராட்சி மற்றும் பாகாயம் காவல் துறையில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. பிறகு பாகாயம் மற்றும் சிஎம்சி ராணிப்பேட்டை கிளை ஆகிய இடங்களில் கோரிக்கை பேனர் மற்றும் சுவரொட்டிகள் வைக்கப்பட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனை பாது காவலர்களை வைத்து கிழித்தெறிந்தது.  மேலும், தொழிற்சங்கத் தலைவர் ஜார்ஜ் தகாத வார்த்தைகளால் தரைக்குறைவாக திட்டியதுடன் தாக்கவும் முயற்சி நடந்துள்ளது. சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்தின் இத்தகைய அராஜக செயலை கண்டித்து, தொழிற்சங்க உரிமையை பறிப்பதை கண்டித்து சங்கத்தின் கவுரவத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் பாகாயம் பேருந்து நிறுத்தத்தில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜார்ஜ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, செயலாளர் எஸ்.பரசுராமன், துணை நிர்வாகி கள் எம்.காசி, ஏ.பழனியப்பன், விச மாவட்ட தலைவர் சி.எஸ்.மகாலிங்கம், விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன், லோ.நவீன் (வாலிபர் சங்கம்) கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.