districts

img

சாலையோர கடைகள் அப்புறப்படுத்தல்: கடலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச.6- கடலூர் பழைய ஆட்சியர் அலுவலக சாலையில் சாலையோர கடைகளை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியதை கண்டித்தும், அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க  அனுமதிக்க கோரியும், கடை கள் கட்டும் வரை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக மாற்று இடம் வழங்க வலி யுறுத்தியும், கடைகள் கட்டி முடித்த பிறகு அதே இடத்தில் கடை வைத்திருக்கும் அனைத்து சாலை ஓர வியாபாரிகளுக்கும் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டியும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகத்சிங் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பி. ரகுராமன் தலைமை தாங்கினார். செயலாளர் என். விஜயபாரதி, பொருளாளர் கே.தமிழ்ச் செல்வன், துணைத் தலைவர் ஜி. அங்கம்மாள், இணை செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிஐடியு மாவட்டத் தலைவர் பி. கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கமேஸ்வரன், சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், ஜி.பாஸ்கரன், எ.பாபு, கே. ஸ்டாலின், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ். சாந்தகுமாரி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநகர செயலாளர் ஜி.சேட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.