திருத்தணி, அக்.8- மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் முயற்சியால் பழங்குடி இருளர் இன மக்களுக்கு அரசு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் குடிமனை பட்டா வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரிய களக்காட்டூரில் தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மக்களுக்கு குடிமனைப்பட்டா, மகளிருக்கு இலவச தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் மதன் ஆகி யோர் முன்னிலையில் பீரகுப்பம் கிராமத்தில் வசித்து வரும் 11 பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட பொருளாளர் குமர வேல், அந்தோணி, பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் முயற்சியால் பழங்குடி மக்களுக்கு குடிமனை பட்டா கிடைத்தது குறிப்பிடத்தக்கது.