மேல்மருவத்தூர், ஜூலை 12- நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பால பணியை உடனடி யாக துவங்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் பகுதியில் சென்னை திருச்சி இடையிலான மேல்மருவத் தூர் ரயில் பாதையில், செய்யூர்-வந்தவாசி செல்லும் சாலையின் ரயில்வே கேட் (எல்சி- 74) அமைந் துள்ளது. இந்நிலையில், தென்மாவட் டங்களில் இருந்து பல்வேறு சரக்கு கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட வைகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், மதுராந்தகம் நகரப்பகுதிக்குள் பகல் நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல், அருகில் உள்ள அச்சிறுப் ்பாக்கம் பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள முக்கிய சாலைகளிலும் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் அனு மதிக்கப்படுவதில்லை. இதனால், சரக்குகள், மணல் மற்றும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள், சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள மேற்கண்ட சாலை வழியாக ரயில்வே கேட்டை கடந்து செய்யூர், சித்தாமூர் வழியாக ஈசிஆர் சாலையை அடைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதனால், நாள்தோறும் ஆயிரக் கணக்கான கனரக வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக செல்லும் பொது மக்களும் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், இந்த இருவழி ரயில் பாதையில் ரயில்கள் வருவதையொட்டி அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற னர். அதனால், இந்த ரயில்கேட் பகுதி யில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த ஆண்டு உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆனால், அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக ரயில்வேதுறை சார்பில் ரூ.31.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், மேம்பால பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். ஆனால், தொடக்கவிழா மட்டும் நடைபெற்றதே தவிர கட்டுமான பணிகள் ஏதும் தொடங்குவதற்கான பூர்வாக பணிகள் கூட இதுவரை நடைபெறாத நிலை உள்ளது. இதுகுறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் கூறு கையில், ரயில்வே கேட் இரவு நேரங்களில் அடிக்கடி மூடப்படுவ தால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரையில் வாகனங் கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையி லும் போக்குவரத்து பாதிக்கப்படுவ தோடு, வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனமும் நீண்ட நேரம் காத்திருந்து ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. ரயில்வே கேட்டும் அடிக் கடி பழுதடைவதால் பழுது சரிசெய்யப் படும் வரையில் காத்திருக்க வேண்டி யுள்ளது. அதனால், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என சிபிஎம் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதி ஒதுக்கியும் மேம்பால பணி கள் தொடங்காமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. அதனால், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பணி களை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். - க.பார்த்திபன்