சென்னை,நவ.25- சென்னை, சோழிங்க நல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்கு வதற்காக அமைக்கப்பட்ட விழுதுகள் என்ற ஒருங்கி ணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (நவ.25) திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாற்றுத்திற னாளிகளின் நலன் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. முதலாவது மையம் அதன்படி, உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெற வுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்க நல்லூர், கண்ணகி நகரில் விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக் கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் சமூக ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் முன்னேற விழையும் பகுதி களில் ஒன்றான கண்ணகி நகரில் இச்சேவைகளை முதலில் வழங்க அரசு மிக கவனமாக இந்த பகுதியை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தில் முதல் முறையாக மாற்றுத்தி றனாளிகளின் உடல் மற்றும் மனம் தொடர்பான நாள்பட்ட மறுவாழ்வு தேவை களை நிறைவேற்றும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி, கண் பார்வை அளவியல், கேட்டல் மற்றும் பேச்சுப்பயிற்சி, இயன் முறை, செயல்முறை மற்றும் உளவியல் ஆகிய ஆறு மறுவாழ்வு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கப்படு வதோடு, இச் சேவைகளை வழங்க வல்லுநர்களும் நிய மிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் இம்மையம் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத் தின் கீழ் இணைக்கப்பட் டுள்ளது. 2023-24 - இல் கள அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியின் போது, கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப் பட்ட கால அட்டவணை யின்படி, இம்மையத்தில் சேவைகள் வழங்கப்படும். இம்மையமானது பெரு நகர சென்னை மாநகராட்சி யின் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங் களில் உள்ள மாற்றுத்திற னாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அணு கல் வசதிகளுடன் அமைக்க ப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கையில் இம்மையத்தில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஐஓடி தொழில்நுட்பம் மேலும், இம்மையத்தில் அமைந்துள்ள கழிப்பறை களைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படுமாயின், அங்கு வைக்கப்பட்டுள்ள பஸ்ஸரை பயன்படுத்த லாம். அதுமட்டுமின்றி ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத் தால் முழுமையாக தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்ட ஐஓடி தொழில்நுட்பம் முதல்முறையாக இந்தியா விலேயே இம்மையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவசர சூழ்நிலைகளை, தொலைவில் இருந்தாலும் உடனே கண்டறிந்து மாற்று த்திறனாளிகளுக்கு உதவிட முடியும். தரமான கட்டிட வடி வமைப்பு ஏற்படுத்தி ஒன்றிய அரசால் வரை யறுக்கப்பட்ட 2021–ன்கீழ் ஒரு புதிய பரிமாணத்தை அடையஇம்மையம் ரூ.3.08 கோடி செலவில் சீர மைக்கப்பட்டுள்ளது மேலும் மற்றொரு முன்னெடுப்பாக இம்மைய வளாகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியால் நடத்தப்படும் ஆவின் பால கம் ஒன்றும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வர், அங்கு மறுவாழ்வு சேவை பெற வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து ரையாடினார்.