districts

img

வெள்ள நிவாரண பொருட்கள் வேண்டாம், பட்டாவும், தொகுப்பு வீடுகள்தான் வேண்டும்

திருவள்ளூர், அக் 17- தமிழக அரசு பழங்குடி மக்க ளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும்,  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, மாவட்ட நிர்வாகம் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனமாகவே உள்ளது.  2023 ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தமிழ்நாடு அரசு ரூ.4 லட்சத்தில் தொகுப்பு வீடுகள் கட்ட நிதியை விடு வித்தும் பழங்குடி மக்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்கிறார் கள்.  குறிப்பாக ஊத்துக்கோட்டை வட்டம் மெய்யூர்,  கச்சூர், திருவள்ளூர் வட்டத்தில் வாசனாம்பட்டு, திருத்தணி வட்டத்தில் செருக்கனூர் ஆகிய பகுதி களில் வாழும் இருளர் இன மக்க ளுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட அரசு ஒதுக்கிய பணம் இன்னும் சென்று சேரவில்லை. இதனால் வீடுகள் கட்ட முடியாமல் உள்ளனர். இதனால்  பழங்குடி இன மக்கள் தற்போதும் அகதிகளாக பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டு களாக திருத்தணி வட்டம் இலுப்பூர் ஊராட்சியில் 24 பழங்குடி குடும்பங் னள் ஏரிக்கரையில் வசித்து வரு கின்றனர். சென்ற வாரம் தான் இவர்க ளுக்கு மருதவல்லிபுரத்தில் மாற்று இடத்திற்கான பட்டா வழங்கப் பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைக்கு பாதுகாப்பு என்ற பெயரில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று அந்த மக்களை வலுக்கட்டாயப்படுத்தி அச்சுறுத்தி மாற்று இடத்திற்கு அழைக்க முயற்சித்ததுள்ளனர். இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பழங்குடி மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் இதனை பொருட்படுத்தவில்லை. குறிப்பாக திருத்தணி வட்டம் பங்களாமேடு,  பகத்சிங் நகர், கோரமங்கலம் வி.கே.ஆர்.புரம்,  இ.என். கண்டிகை,  பூணி மாங்காடு, தாளவேடு,  அருங்குளம்,  நெமிலி, காஞ்சனா நகர், வீ.புதூர், திருவள்ளூர் வட்டத்தில் மப்பேடு வயலூர்,  குன்னவளம்,  ஊத்துக்கோட்டை வட்டத்தில் திருக்கண்டலம்,  ஆவடி வட்டத்தில் நெமிலிச்சேரி மற்றும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொகுப்பு வீடுகள் கேட்டு காத்திருக்கிறார்கள். பட்டா வழங்கப்பட்ட பல இடங்களில் நிளம் அளவீடும் செய்யாத நிலை நீடிக்கிறது.  இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட 9 வட்டத்தில் உள்ள 62 கிராமங்களில்,  62 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. அதில் மொத்தம் 1142 குடும்பங்கள் ஆண்கள் 1067,  பெண்கள் 1276 குழந்தைகள் 860, என மொத்தம் 3203 பேர் தங்க வைக்க ப்பட்டுள்ளதாக  மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது. இதில் 90 விழுக்காட்டினர்  பழங்குடி மக்களே என்பது தான் உண்மை.  எத்தனை காலத்துக்கு பழங்குடி மக்களை மழைக்காலங்களில் அகதி களாக மாவட்ட நிர்வாகம் வைத்தி ருக்கப்போகிறது. அவர்களுக்கு நிரந்தரமாக வீடுகளை கட்டிதருவது எப்போது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 தமிழக அரசு கொண்டுவரும் பழங்குடி மக்களுக்கான நலத் திட்டங்கள்,  சிறப்பு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் சரியான நேரத்தில் செயல்படுத்தி இருந்தால் இந்த அவல நிலையை போக்கியிருக்க  முடியும். எனவே இந்த பிரச்சனையில்   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உடனடியாக தலையிட்டு பழங்குடி மக்களுக்கான நலத் திட்டங்களை குறித்த காலத்திற்குள் செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசன் ஆகியோர்  வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் புதனன்று (அக் 16),  திருத்தணியில்  சிறு பான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆகியோர் குமாரகுப்பம் அரசு பள்ளியில் தங்கியிருந்த இருளர் இன மக்க ளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னதுரை தலையிட்டு நிவாரணம் வழங்குவதை நிறுத்துங்கள். பாய், போர்வையும் வேண்டாம், குமார குப்பம், பங்களாமேடு ஆகிய பகுதி களில் மழைநீர் தேங்கியுள்ளதை நேரடியாக வந்து ஆய்வு செய்யுங்கள், ஒவ்வொரு மழைக் காலத்திலும் நிவாரண பொருட்களை வழங்கி போட்டோ எடுத்த போதும். அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரடியாக வந்து ஆய்வு செய்யுங்கள் என்றார். எங்களுக்கு வருடா,  வருடம் நிவாரண பொருட்களை வழங்குவதை விட  குடிமனை பட்டா, தொகுப்பு வீடு களை வழங்குங்கள் என்றும்  அவர் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து  இருளர் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் நாசர் உத்தரவிட்டார்.