புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏழு நபர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணையை வழங்கினார். வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் வீராசாமி செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.