சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் புதுச்சேரி எல்லையான தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் பாகூர் பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதி மக்களை முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளோடு புதன்கிழமை சென்று பார்வையிட்டார். அப்போது டி.எண்.பாளையத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.உடன் சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் வேளாண் அமைச்சர் தேனி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.