புதுச்சேரி அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கரிக்கலாம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், அரசுச் செயலர் ஜெயந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துறை இயக்குநர் செல்வி பி. முத்துமீனா மற்றும் அரசு அதிகாரிகள் திரளான பெண்கள் விழாவில் கலந்து கொண்டனர்.