districts

img

ஆவண எழுத்தர்களுக்கு பதிவுத்துறையின் உரிமத்தை அளித்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி, டிச.26-  பட்டய படிப்பு முடித்த ஆவண எழுத்தர்களுக்கு பதிவுத்துறையின் உரிமத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.  கடந்த 2021-22 கல்வி ஆண்டு வரை ஆவண தயாரிப்பில் பட்டயப் படிப்பு முடித்த 27 நபர்கள் ஆவண எழுத்தர் உரி மத்திற்காக புதுச்சேரி பதிவுத்துறையில்  விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்த ஆவணம் எழுத்து களின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஆய்வுக்குப் பின்னர்  சான்றிதழ் சரி பார்ப்பு செய்யப்பட்டது. இதில் 27 விண்ணப்பதாரர்கள் ஆவண எழுத்தர் உரிமம் பெற தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவண எழுத்தாளர்களுக்கு பதிவுத்துறையின் உரிமம் வழங்கும் ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,  அமைச்சர்   லட்சுமி நாராயணன், அரசுச் செயலர் கேசவன், பத்திர பதிவுத்துறை மாவட்ட பதிவாளர்  தயாளன் மற்றும் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.