districts

img

கள உதவியாளர்களுக்கு பணி ஆணை: முதல்வர் வழங்கினார்

புதுச்சேரி, ஜன.3- புதிதாக தேர்வு செய்யப்பட்ட கள உதவியாளர் களுக்கு பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி புதனன்று (ஜன.3) வழங்கினார். புதுச்சேரி அரசின்  நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலி யாக இருந்த கள உதவியாளர்கள் பணி யிடங்களுக்கு கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளின்படி கள உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டது. இதில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  கள பணியாளர்களாக தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன.3) சட்டப்பேரவையில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன், நில அளவை துறையின் இயக்கு நர் ச. செந்தில் குமார் மற்றும் துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.