இந்த ஆண்டுக்கான மாநில அளவி லான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அக்.4 ஆம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோயம் புத்தூர் என ஐந்து இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 24-ஆம் தேதி முடிவடை யும் இந்த போட்டியில் 65 தங்கம், 52 வெள்ளி, 55 வெண்கலம் உட்பட ஒட்டு மொத்தமாக 172 பதக்கங்களை வென்றுள்ள சென்னை மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெங்கலம் உட்பட 47 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சேலம் மாவட்டம் 14 தங்கம், 11 வெள்ளி, 12 வெங்கலம் உட்பட 37 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தி லும் 13 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் திண்டுக்கல் நான்கா வது இடத்தில் உள்ளது. போட்டிகள் முடிவடைய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் 157 பதக்கங்களை வென்றிருக்கும் சென்னை மாவட்டத்தின் பதக்க வேட்டை தொடர்கிறது.