districts

img

பாஜக ஆட்சியால் சுதந்திரத்திற்கு பேராபத்து!

சிதம்பரம், பிப்.16- நாட்டில் பாஜக ஆட்சி நீடிக்கும் வரை சுதந்திரத்திற்கு ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.  சிதம்பரத்தில் திராவிடர் கழக பொதுக்குழுவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,   இஸ்லாமியர்கள் சுய விருப்பத்துடன் அவர்களின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை  வக்ஃப் போர்டுக்கு வழங்குகிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு வக்ஃப் வாரியத்தை மாற்றிய மைக்க திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  வக்பு  வாரி யத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத வர்கள் உறுப்பினராக இருக்கலாம் என்று அந்த மசோதாவில் சேர்க்க உள்ளது. இதில் இந்துக்கள் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ்-பாஜக வினர் தான் அதிகமாக இருப்பார்கள்.  இஸ்லாமிய மக்கள் வழங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கையகப்படுத்த கூடிய நிலைமை ஏற்படுகிறது என்றால் இந்த நாடு எதை நோக்கி செல்கிறது. எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே பாஜக என்ற ஆட்சி நீடிக்கிற வரை இந்தியாவில் சுதந்திரத்திற்கும், ஜன நாயகத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் பேராபத்து இருக்கிறது. மணிப்பூரில் கேவலமான பாஜக மணிப்பூரில் இதுவரை இருந்தது பாஜக ஆட்சி தான்.  ஆனால் அங்கு அரசியல் ஆதாயத்திற்காக இரு சமூக மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டி ஆதாயம் அடைய பார்த்தார்கள்.  அந்த கலவரத்தை இன்று வரை கட்டுப்படுத்த முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளனர். மத்தியில் வேறு ஆட்சி மாநிலத்தில்  வேற ஆட்சி இருக்கும்போது  குடியரசு தலை வர் ஆட்சி அமல்படுத்தப்படும்.  ஆனால் முதல்முறையாக பாஜக ஆளும் மாநிலத்திலேயே இது போன்ற கேவலமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்தில் நடைபெற்ற திரா விடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.  அதில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது வரவேற்கத்தக்க தீர்மானம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பெரியார், கலைஞர் தொடங்கி வைத்ததை தற்போது மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது போன்று எளியவர்களும் அங்கு அர்ச்சக ராக ஆகலாம் என்றால் நடராஜர் கோயில்  இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால் தான் ஆக முடியும். இந்தக் கோயில் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. இதில் பல பண்பாடு, கலாச்சாரம், நுணுக்கமான கலை சிற்பங்கள் தொல்லியல் ஆய்வு கள் எல்லாம்  பொக்கிஷமாக உள்ளது. இதனை ஒரு சமூகம் மட்டும் கட்டுப்படுத்தும் நிலைமையில் உள்ளது பாதுகாப்பற்றது. தமிழக அரசு தனி சட்டம் இயற்றி கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கீழ் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் வலியுறுத்துகிறது என்றார் பால கிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து திக தலைவர் கி. வீரமணி  பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார். பின்னர் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி,  மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், விசிக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.  கூட்டத்திற்கு திக கடலூர் மாவட்டத் தலை வர் பூ.சி  இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் யாழ்திலீபன் முன்னிலை வகித்தார்.