districts

img

செஸ் ஒலிம்பியாட் ஊர்வலம்

சிதம்பரம், ஜூலை 27- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 44ஆவது ஒலிம்பியாட் செஸ் போட்டி குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வட்டாட்சியர் ஹரிதாஸ், பதிவாளர் சீதாராமன், மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சண்முகம், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலை செஸ் போர்டு போல் வண்ணம் தீட்டப்பட்டது. வீரர்களை வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.