districts

 சென்னை வில்லிவாக்கம் கார் கவிழ்ந்து 2 சிறுமிகள் பலி

ராணிப்பேட்டை, மே 15-

   சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம் தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலத்தில் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது  ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சிறுமிகள் தபசு பாத்திமா, சுமையா பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையினர் 2 சிறுமிகளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.