districts

img

தெருவோர வியாபாரிகளை அகற்றக்கூடாது மத்திய சென்னை வியாபாரிகள் சங்க மாநாடு வலியுறுத்தல்

சென்னை, டிச. 18 - தெருவோர வியாபாரி களை அகற்றுவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரி கள் மற்றும் சிறுகடை தொழி லாளர்கள் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு செவ்வா யன்று (டிச.17) சிந்தாதரிப் பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், நகரை அழகுபடுத்துதல் என்ற பெயரில் கார்ப்பரேட் நலன்களுக்காக தெரு வோர வியாபாரிகளை அகற்று வதை நிறுத்த வேண்டும். தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்-2014ன் படி மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை முறையாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு விற்பனைக் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிறு கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் பூமிநாதன் சிஐடியு கொடியை ஏற்றி னார். 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரிய தர்ஷினி  வரவேற்றார். ஜி.அன்பழகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மூத்த தொழிற்சங்கத் தலை வர் டி.கே.ரங்கராஜன் மாநாட்டை தொடங்கி வைத்தார் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி. சுந்தரம் அமைப்பாக்க அறிக்கையை முன்மொழிந்தார். சென்னை பெருநகர சிறுகடை வியா பாரி சங்கங்களின் கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் எம்.வி. கிருஷ்ணன், சிறுகடை வியாபாரிகள் சங்கத் தலைவர் அபுதாகீர், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.தயாளன், பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியம், சுமைப்பணி சங்க பொதுச் செயலாளர் ஆர். அருள்குமார் உள்ளிட்டோர் பேசினர். சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் எஸ்.சந்தியாகு நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைச் செய லாளர் பி.கே.மூர்த்தி நன்றி கூறினார். மாவட்ட கவுரவத் தலைவராக எம்.வி.கிருஷ்ணன், தலைவராக எஸ்.கே.முருகேஷ், பொதுச்செயலாளராக பி.சுந்தரம், பொருளாளராக வி.அருண்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.