சென்னை, அக்.3- சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி ஆர்ய கந்தம் ராஜேஷ் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்கு தகுதி பெற்றுள்ளார் பெரும்பாக்கத்தில் உள்ள ஆர்கிட்ஸ் சர்வதேச பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் ஆர்யா கந்தம் ராஜேஷ் ஐ.எஸ்.எஸ்.ஓ தேர்வின் (இந்திய விண்வெளி அறிவியல் ஒலிம்பியாட்) 1 வது நிலை சீனியர் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை திருச்சூரில் வித்யா அறிவியல் தொழில்நுட்ப கல்விநிலையத்தில் நடைபெறவுள்ள இஸ்ரோ விஞ்ஞானி களுடனான பயிலரங்கம் மற்றும் தேர்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். அகில இந்திய தரவரிசையில் 108 வது இடத்தை பெற்றுள்ளார். பயிலரங்கத்தில் பங்கேற்கும் முதல் 120 பங்கேற்பாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சிறந்த மதிப்பெண் மூலம் தமிழக அளவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.