districts

img

பருவமழையை சந்திக்கத் தயாராகும் சென்னை மாநகராட்சி நிர்வாகம்

சென்னை, ஆக.18- தலைநகர் சென்னையில் வட கிழக்கு பருவமழையின் போது மக்கள் சந்திக்கும் வெள்ளப் பாதிப்பு களுக்கு தீர்வு காணும் வகையில் மழைநீர் வடிகால்கள் ஒவ்வொரு ஆண்டும் சீரமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகை யில் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. இவற்றை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா  சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ்சாலை துறை, மெட்ரோ ரயில், நீர்வளத்துறை சார்பில் மாநகர் முழுவதும் நடந்து வரும் பணிகளை பார்வை யிட்டார். தேவையான ஏற்பாடு களை விரைவாக செய்து முடிக்கு மாறு அறிவுறுத்தினார். அப்போது நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவு பெரிதும் கவனம் பெற்றது. அதாவது, சென்னையில் எந்தெந்த பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று கணக்கெடுத்து கொள்ள வேண்டும். அந்த பட்டியல் அனைத்து அதிகாரிகளின் கைகளில் இருப்பது அவசியம். இதன் அடிப்படையில் மழைநீர் வடிகாலில் தற்காலிக பைப்களை பொருத்த வேண்டும். இவை அதிகப்படியான நீரை சேகரித்து வடிகால்கள் மூலம் வெளியேற்ற உதவும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அடைப்புகள் ஏற்படும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டு முன்னேற்பாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக போரூர் ஜங்ஷன் - வானகரம் மெயின் ரோடு ஆகிய வற்றை இணைக்கும் கழிவுநீர் வாய்க்கால்களை பார்வையிட்டார். இவற்றை சீரமைத்து தடையின்றி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். பின்னர் கிண்டி - கத்திப்பாரா சந்திப்புக்கு சென்றார். அங்கு கழிவுநீர் வாய்க்கால் கட்டு மானப் பணிகளின் நிலவரத்தை பார்வையிட்டார். இது இணைப்பில் தவறவிட்ட 200 மீட்டர் தூரப் பணிகள் என்பது கவனிக்கத்தக்கது. இதன் பணிகள் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜி.எஸ்.டி சாலையை ஒட்டி கால்வாய் அமைக்கும் பணி களையும் தலைமை செயலர் பார்வையிட்டார்.