காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்குவது நிறுத்தம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, டிச.1 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என்று அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி. 358 பள்ளிகளை சேர்ந்த ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரம் மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 35 சமையல் கூடங்களில் இருந்து தினசரி உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உணவு வழங்கும் திட்டத்தை தனியாருக்க கொடுக்க நவ.29 அன்று சென்னை மாநகரட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழுக்களும், இந்திய மாணவர் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மாநகராட்சி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில், உயர் அலு வலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பு டன் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் செயல்படுத்த மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முத லமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நகர விற்பனைக்குழு கூட்டம் ரத்து ஆணையருக்கு சிறுகடை வியாபாரிகள் கண்டனம்
சென்னை, டிச. 1 - நகர விற்பனைக் குழு கூட்டத்தை காரண மின்றி ரத்து செய்த மாநகராட்சி ஆணை யருக்கு சென்னை மாநகர சிறு கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி நகர விற்பனைக் குழுவின் கூட்டம் நவ.28 அன்று நடைபெறும் என்று அறி விக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். வியாபாரிகள் விற்பனை செய்வதற்கு இடங்களை தேர்வு செய்வது உள்ளிட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருந்தது. இந்த கூட்ட முடிவுகளை நவ.30ஆம் தேதி நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில் எவ்வித காரணமும் இன்றி மாநகராட்சி ஆணையர் கூட்டத்தை ரத்து செய்தார். ஆணையரின் செயல் கண்டனத்திற்குரியது. விற்பனைக்குழு கூட்டத்தை மாதாமாதம் நடத்த வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படியே அதிகாரிகள் செயல்பட வேண்டும். அதுவரை கடைகளை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிநவீன அம்சங்களுடன் புதிய செல்பேசி அறிமுகம்
சென்னை,டிச.1- உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூஓஓ நிறுவனம் அதிநவீன அம்சங்களுடன் புதிய ஐக்யூஓஓ 12 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார் போன் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் பய னர்களுக்கு சிறந்த அனு பவத்தை வழங்குவதோடு ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தில் பிக்சல் இல்லாத முதல் ஸ்மார்ட்போனாக வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த மெமரி மேலாண்மை, அதிக படைப்பாற்றல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் புதிய வீடியோ எடிட்டிங் கருவிகளையும் இந்த செல்பேசி வழங்குகிறது.
இளம் தொழில்முனைவோர் மாநாடு
சென்னை, டிச.1- இளைய தலைமுறை தொழில்முனைவோரின் திறன்களை அடையாளம் காணவும் அவர்களை ஊக்கப் படுத்தி நாட்டின் வளர்ச்சியில் ஈடுபடுத்தவும் சென்னையில் டிசம்பர் 21 – 22 தேதிகளில் “டேக் பிரைட் 2023” என்ற தலைப்பில் தேசிய உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) இளை யோர் பிரிவான யங் இந்தியன்ஸ் (Yi) இளம் தலை வர்களது திறன் மற்றும் ஆக்கபூர்வ மாற்றத்திற்கான கலந்துரையாடலை ஊக்குவிக்கும் ஒரு பகுதியாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, ஜி 20 மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிதாப் காந்த், தொழில்துறையின் பிரபல ஆளுமைகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். இந்த தகவலை யங் இந்தியன்ஸ் (Yi) அமைப்பின் தேசிய தலைவர் திலீப் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பருவமழையை எதிர்கொள்ள தயார்: மின்சார வாரியம் தகவல்
சென்னை, டிச.1 - வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள் வது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு நவ.29 மிக கனமழை பெய்த போதிலும், 240 துணை மின் நிலை யங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. கனமழையால் 8 மின்பாதையில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப் பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னூட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரிசெய்யப்பட்டன. சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின்மாற்றிகளில் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேங்கிய பகுதிகளில் கண்டறியப்பட்ட 4,658 பில்லர் பாக்ஸ்கள் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டது தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 3,00,887 மின்கம்பங்கள். 14,187 கி.மீ. மின் கம்பிகள், 19,759 மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 15,300 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் மின் தடை சம்பந்தமான புகார்களை மின்னக எண் 94987 94987 வாயிலாக ஒரே நேரத்தில் 65 புகார்களை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மின் பகிர்மான வட்டம் மின்தடை நீக்கும் மையம் வழியாகவும் புகார்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல், மழை காரணமாக பிச்சாவரத்தில் படகு சவாரி ரத்து
சிதம்பரம், டிச.1- சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சாவரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உண்மைக்கு மாறான செய்தி: நகர்மன்ற கூட்டம் கண்டனம்
ராணிப்பேட்டை, டிச.1 - ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் வியாழனன்று (நவ. 30) தலைவர் முகமது அமீன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் குல்சார் அகமது, நகராட்சி ஆணையாளர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், போலி பத்திரிகையாளர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவதாக நகர மன்ற தலைவர் முகமது அமீன் கூறினார். இதை மன்ற உறுப்பினர்கள் வரவேற்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.