districts

img

சென்னை இலக்கியத் திருவிழா-2023 ஜனவரி 6-8 தேதிகளில் நடக்கிறது

சென்னை, டிச. 14 - சென்னை இலக்கியத் திருவிழா ஜன.6-8 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பொருனை, வைகை, காவேரி, சிறுவாணி, சென்னை எனும் பெயர்களில் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படுமென அறிவித்திருந்தது. இதன்படி சென்னை இலக்கியத் திருவிழா அடுத்தாண்டு 2023ஆம் ஜனவரி 6-8 தேதி களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இலச்சினையை செவ்வா யன்று (டிச.13) அண்ணா நூற்றாண்டு வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வெளியிட்டார். இந்த 3 நாள் இலக்கியத் திருவிழாவில் தமிழகத்தின் படைப்பாளிகள், கலைஞர்கள், இசை ஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இலக்கியம் இது சார்ந்த படைப்பாளிகள் - வாசகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள், பண்பாடு சார்ந்த நிகழ்வில் படைப்பாளிகள் - கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாணவர்களிடையே இலக்கிய வாசிப்பை கொண்டு செல்லும் நோக்கிலான பல்வேறு பட்டறைகள், குழந்தைகளின் ரசனை அறிமுகம், இவர்களுக்கான நூல்கள் அறிமுகம், பயிற்சி கள், திரைப்படம் சார்ந்த ஆர்வலர்களுக்கான கருத்தரங்குகள், திரைப்பட திரையிடல்கள் எனவும் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டின் ஆட்டக்கலை குழுக்கள், இசைக்குழுக்கள், நாடகக்குழுக்களும் பங்கேற்கின்றன. தமிழின் அரிய சிற்றிதழ் கண்காட்சி, படைப்பாளர்கள் பற்றிய கண்காட்சி, தொல்பொருட்களின் கண்காட்சி என பார்க்கவும் ரசிக்கவும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.