districts

சென்னை முக்கிய செய்திகள்

நியூஸ் கிளிக் ஆசிரியர் கைது 

சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கண்டனம்

சென்னை, அக். 5 நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் ஆசிரியரை உபா (UAPA) சட்டத்தில் கைது  செய்திருப்பதற்கு சென்னை பத்திரிக்கை யாளர் யூனியன் (எம்யூஜெ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மணிமாறன் விடுத்துள்ள அறிக்கையில், நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்தில் சோதனை நடத்தி  டெல்லி அலுவலகத்திற்கு காவல்துறையி னர் சீல்வைத்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்க யஸ்தா, மனித வளத்துறை தலைவர் அமித்  சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.  சீனாவிடம் நிதி பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான பரப்புரையை நியூஸ்கிளிக் மேற்கொண்டு வருவதாக பாஜகவும் டெல்லி காவல்துறையும் கூறியுள்ளது. இதற்கு ஆதாரமாக நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை ஒன்றை  குறிப்பிடுகின்றனர். ஆனால் நியூஸ்கிளிக் வெளியிட்டுள்ள செய்திகள் அனைத்தும் அந்த இணையதளத்திலேயே உள்ளன.  அவற்றில் இருந்து சீனாவின் பரப்புரையை மேற்கொண்டதற்கான ஆதாரம் எதையும் அவர்களால் காட்ட முடியவில்லை. எனவே, பத்திரிகையாளர்களின் சுதந்திர மான செயல்பாடுகளையும் ஊடக சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த முயற்சிக் கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை களுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) கடும் கண்டனம் தெரிவிக்கி றது. அரசின் மீதான ஊடகங்களின் விமர்சனங்களை தேசத் துரோகமாகவோ தேச விரோத செயலாகவோ சித்தரிக்கும் ஒன்றிய அரசின் போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்துகிறது.  எனவே உச்சநீதிமன்றம் தலையிட்டு ஊடகத் துறைக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத் தல்களை உடனடியாக தடுக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் யூனியன்  வேண்டுகோள் விடுக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இயந்திரவியல் மாணவர்களுக்கு  தொழில்நுட்ப கருத்தரங்கம்

சென்னை,அக்.6- சென்னை வடபழனியில் உள்ள  எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) இயந்திரவி யல் துறையின் சார்பில்  தேசிய அளவிலான தொழில்  நுட்பக் கருத்தரங்கம் “KRATORQ 2023” வெள்ளிக்கிழமை  (அக்.6) நடைபெற்றது.  இயந்திரவியல் துறைத்தலைவர் ஆர்.ராஜாராமன் முதல்வர் சி.வி.ஜெயக்குமார், துணை முதல்வர் சி.கோமதி ஆகியோரின்  உரையுடன் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்றன. சென்னை அசோக் லேலன்டு துணை மேலாளர் ஏ ஆர் அரவிந்த் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பொறியியல் பரிணாமம், உற்பத்தி களத்தில் சமீபத்திய போக்குகள், தரக் கட்டுப்பாடு மற்றும் உத்தரவாதம் என்ற தலைப்பில் உரை 

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னரே  சிஐடியு தலைவர்களை கைதுசெய்வதா? சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டக்குழு கண்டனம்

காஞ்சிபுரம், அக்.6- ஆட்சியரை எதிர்த்து போராட்டம் நடத்து வதற்கு முன்பே சிஐடியு தலைவர்கள், தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின்  மாவட்டச் செயலாளர் சி.சங்கர்   விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சமீபத்தில் நடந்த மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் நம் ஆட்கள்  (தமிழ்நாடு) சலுகைகளுடன் அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஆனால், “வடமாநிலத்தவர்கள் குறைவான சம்பளம் கொடுத்தாலும், அதிகமாக வேலை செய்கிறார்கள்” என்று கூறியதைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில்  மாநிலம் முழுவதும் கடந்த 5 ஆம் தேதி   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில்  காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத் திற்கு காவல்துறையிடம் முறையான அனு மதி கடிதம் கொடுத்த பின்னரும் அனுமதி கொடுக்காமல்  ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட  சிஐடியு தலைவர்களையும் ஊழியர்களை யும் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே   தேரடியில்   அலுவலகத்தில்  இருந்த சிஐடியு தோழர் களை அராஜகமான முறையில் கைது  செய்ததை கடுமையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு உடனடியாக காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியரை திரும்பப்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். காவல்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் அராஜகமானதாக இருந்ததை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் சங்கர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு, ப்ரீபெய்ட் மீட்டரை  புதுவை அரசு திரும்ப பெற வேண்டும்: சிபிஎம்

புதுச்சேரி,அக்.6- புதுச்சேரி அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு- ப்ரீபெய்ட் மீட்டர் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வீடு மற்றும் தொழிற்சாலை களுக்கான மின் கட்டணத்தை வழிப்பறி கொள்ளை போல  உயர்த்திக் கொண்டே வருகிறது. அதுவும் ஒரே ஆண்டில் இரண்டாவது முறை யாக உயர்த்தியுள்ளது. இதனால் பொது மக்கள் மட்டுமின்றி சிறு குறு, குடிசை தொழில் முனைவோர், வர்த்தக நிறு வனங்களின் உரிமையாளர்கள் மீள முடியாத சூழலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, இந்த அநியாய மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மத்திய மின் கொள்முதல் விலையை ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியதை காரணம் காட்டி, வீடுகளுக்கு யூனிட்டுக்கு 25 பைசா முதல் 40 பைசா வரை கூடுதலாகவும் வர்த்தக மின் கட்டணம் யூனிட்டுக்கு 66 பைசா முதல் 79 பைசா கூடுதலாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  இதே போல் தெரு விளக்குகளுக்கு யூனிட்டுக்கு 78 பைசா, கனரக தொழிற்சாலைகள் யூனிட்டுக்கு 60 பைசா என்றும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க புதுச்சேரி ரங்கசாமி-பாஜக கூட்டணி அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது தொடுக்கும் நேரடி தாக்குதலாகும். ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் ஏராளமான நிதி புதுச்சேரிக்கு கிடைக்கும், வேலைவாய்ப்பு உருவாகும், விலைவாசி குறைக்கப்படும், என்றெல்லாம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, மக்கள் மீது பல முனைகளிலும் தாக்குதலை தொடுத்துள்ளது.  கொரோனா, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்ற நாசகார செயலால் வேலை இழந்து, வருவாய் இழந்து, தொழில் நசிந்து,  பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் தொழில் முனைவோர் மீது இந்த மின் கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது. புதுவை மக்களிடம் கடும் கொந்தளிப்பு எழுத்து உள்ள நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், கட்டண உயர்வும் புதுச்சேரிக்கான மின் கொள்முதல் அளவையும் குறைக்க ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுத போவதாக அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும். எனவே ஒன்றிய பாஜக அரசும் புதுச்சேரி ரங்கசாமி அரசும் தற்போது உயர்த்திய மின் கட்டணத்தையும்,  ப்ரீபெய்ட் மீட்டர், மின்துறை தனியார்மயம் போன்ற மக்கள் விரோத திட்டங்களையும் கைவிட வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.

வாலிபருக்கு  10 ஆண்டு சிறை

விழுப்புரம்,அக்.6- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தொலைத் தொடர்புத் துறை அலுவ லகத்தில் பயிற்சி வேலைக்கு சென்று வந்தார். அப்போது  கூத்தக்குடி மணி கண்டன் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மணிகண்டன் பாலியல் வண் புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். பிறகு, திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். பின்னர், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதி பதி தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இதை யடுத்து கடலூர் சிறையில் அடைத்த னர்.