districts

சென்னை முக்கிய செய்தி

ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1.87 லட்சம் மோசடி:  கணவன் மனைவி கைது
அம்பத்தூர், ‌செப். 16- திருநின்றவூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி 350 பேரிடம் ரூ 1 கோடியே 87 லட்சத்து 54 ஆயிரம் மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். திருநின்றவூர் அருகே உள்ள பெருமாள் பட்டு ராகவேந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (41).  இவரது கணவர் பிரேம் ஆனந்த் (44). அதே பகுதியில் வசிப்பவர் விக்னேஷ்வரி (எ) அம்மு. இவர்கள் 3 பேரும்  சேர்ந்து ஏலச்சீட்டு, நகை பண்டு, மளிகை பண்டு பிடித்துள்ள னர். மேலும் வட்டிக்கு பணமும் கொடுத்துள்ளனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி  வருவதால் சுமார் 350. பேர் ஏலச்சீட்டு, நகை பண்டு, மளிகை பண்டுகளில் சேர்ந்துள்ளனர். ஆனால் சேர்ந்தவர்களுக்கு பணம், பொருள் கொடுக்கவில்லை. இதனால் பணம் கட்டியவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மஞ்சுளா தனது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக மாயமாகி விட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணம் கட்டியவர்கள் இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் மனு அளித்தனர். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த  மஞ்சுளா, அவரது கணவர் பிரேம் ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசார ணையில் 350 பேரிடம் ரூ 1 கோடியே 87 லட்சத்து 54 ஆயிரம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இரு வரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறை வாக உள்ள விக்னேஷ்வரியை தேடி வருகின்றனர்.


நீர் சுத்திகரிப்பு நிலையம்
மாமல்லபுரம்,செப்.16- கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில், ஒன்றிய அரசின் “தூய்மை இந்தியா” திட்டத்தின் கீழ்,  ரூ15லட்சம் செலவில், சதுரங்கபட்டினம் மீனவர் குடியிருப்பு,  காவாக்கரை, கல்பாக்கம் கே.வி-2 பள்ளி, திருக்கழுக் குன்றம் அரசு மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் மக்கள்  பயன்படுத்த சுத்தமான குடிநீர் வசதிக்காக தலா 500லிட்டர்  உற்பத்தி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், அணுசக்தி  துறையின் தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டது. அவற்றை  இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.


படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில் சேவை: ரயில்வே தகவல்
சென்னை, செப். 16- விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தென்னக ரயில்வே  பொது மேலாளர் மல்லையா தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வந்தே பாரத் மெட்ரோ ரயில் இந்த ஆண்டுப் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும்,  சென்னையில் இருந்து தில்லிக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும்,  விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ரயில்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் சாதாரண நாட்களில் கூட கூட்டம் அலை மோதுவதால், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொன்னேரி  மருத்துவமனைக்கு  கூடுதலாக 2 ப்ரீசர் பாக்ஸ் வசதி

திருவள்ளூர்,செப்.16- பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000 த்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.  இந்நிலையில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கொலை,  தற்கொலை, சாலை விபத்து மற்றும் விஷக்கடிக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் உடல்களை பாதுகாக்க மருத்துவமனையில் இரண்டு ப்ரிசர் பாக்ஸ் மட்டுமே உள்ளன. சில நேரங்களில் கூடுதலாக உடல்கள் வருவதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றன.  இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மருத்துவமனையில் கூடுதலாக இருந்த ஃப்ரீசர்  பாக்ஸ் கொண்டுவரப்பட்டு பிணவறையில் பொருத்தப் பட்டுள்ளது. இதனை பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்  டாக்டர் பரிமள விஸ்வநாதன் தலைமை மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவ குழுவினர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இனி மருத்துவ மனைக்கு கூடுதலாக உடற்கூறு ஆய்விற்கு சடலங்கள் வந்தால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது தவிர்க்கப்படும் என தலைமை மருத்துவர் தெரிவித்தார்.


சிறந்த செயல்திறன் கொண்ட  பிளாஷ் டிரைவ் அறிமுகம்

சென்னை, செப்.16- இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிவேமாக வளர்ச்சி கண்டு வருகிறது.  சமூக வலைதளம் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் என ஏராளமான உள்ளடக்கங்கள் ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு அவை வைரல் ஆகி வருகிறது. இதன் காரணமாக இதற்கான மேம்பட்ட தொழில்நுட்பம், தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டிற்கான தேவை என்பது அதிகரித்துள்ளது.  அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில், எஸ்எஸ்டி பிளாஷ் டிரைவ் பிரிவில் விருது பெற்ற  வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம், இந்தியாவில் புதிதாக WD Blue SN580 NVMe SSD பிளாஷ் டிரைவை அறிமுகம்  செய்துள்ளது. புதிய, NVMe PCIe Gen 4.0 இன்டர்னல்  பிளாஷ் டிரைவ், தற்போதைய பர்சனல் கம்ப்யூட்டர்க ளின் வேகத்தை அதிகரிப்பதோடு, தனிப்பயன்பாட்டு கட்ட மைப்பை உயர்த்துகிறது. மேலும் ஆக்கப்பூர்வமான ஆர்வமுள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள் பயன்படுத்து வதற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.