திருவொற்றியூர் 4ஆவது வார்டு எர்ணாவூரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம், பால் கலப்படத்தை கண்டுபிடிப்பது, எரிமலை உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தது.