திருவள்ளூர், ஆக.6- எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை ரூ. 12301 கோடி ரூபாய் செலவில்133 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் 6 வழிச்சாலை பணிகளின் தரத்தை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஏ.வ. வேலு ஆகியோர் திங்களன்று நேரில் ஆய்வு செய்தனர். திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் ,சிங்கப்பெருமாள் கோவில் சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை - எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வுகாண இந்த சாலை அமைக்கப்படுகிறது.