districts

img

சுகப்பிரசவத்தில் முதன்மை வகிக்கும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

செங்கல்பட்டு, ஆக. 4- செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுகப்பிரசவ சதவீதத்தில் முதன்மை வகிக்கிறது என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 54வது பட்டமளிப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. பட்டம் பெற்ற 100 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சான்றிதழ்களை வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி 1965 முதல் இன்று வரை  மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒரு சிறந்த பன்நோக்கு  மருத்துவமனையாக 1750 படுக்கை வசதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 22 முதுகலை மற்றும் 8 சிறப்பு முதுகலை பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையின் மூலம் 3500  முதல் 4000 புறநோயாளிகள் நாள் தோறும் பயன் பெறுகின்றனர். மேலும் 1200 முதல் 1400 உள்நோயாளிகள் சிறந்த சிகிச்சை பெறுகின்றனர். இங்கு  விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் துரிதமான முறை யில் செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றி வருகிறது. மேலும் விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சேவைகள் தாய் சேய் நலனை உறுதி செய்கின்றன. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே சுகப்பிரசவத்தில் முதன்மை வகிக் கிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்  கல்லூரி ஆண்டுதோறும் 500 இளங் கலை மருத்துவர்கள், 94 முதுநிலை மருத்துவர்கள், 22 சிறப்பு முதுகலை மருத்துவர்கள், 768 துணை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப் பிரமணி பேசுகையில், செங்கல்பட்டு மாவட்டம், முழுவதும் ரூ.222.88 கோடி  செலவில் 40 புதிய மருத்துவ கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், செங் கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வர லட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ  பல்கலைகழகம் துணைவேந்தர்  மரு.கே.நாராயணசாமி, செங்கல்பட்டு  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.