districts

img

செங்கல்பட்டு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்...

விவசாயத்தையும் விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்திட வலியுறுத்தியும் காட்டுப்பன்றியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்   மாவட்ட தலைவர் வி.அரிகிருஷ்ணன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் வாசுதேவன் மாவட்ட பொருளாளர் து.விஜயகாந்த் சங்கத்தின் நிர்வாகிகள் எச்.முருகேசன், எம்.அழகேசன், ஜி.மாரி, எம்.எஸ்.அர்ஜுன் குமார், ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாவட்ட நிர்வாகத்திலும் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.