ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக சங்கத்தின் செங்கல்பட்டு பகுதி தலைவர் பிரதீபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர். ருத்ரநாத், பொருளாளர், ஜோஸ்பின் விஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முனி செல்வம், பொன்னுரங்கம், பரணிவர்மன், நிசாந்தினி, கலையரசி ஆகியோர் பேசினர்.