சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்
தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை, அக். 12- தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூருக்கு தினசரி காலை நேரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் எழும்பூரில் காலை 9:45 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை வழியாக இரவு 8.35 மணிக்கு திரு நெல்வேலியையும், இரவு 10.35 மணிக்கு நாகர்கோவிலையும் கடந்து செல்லும். பின்னர் நள்ளிரவு 12.20 மணிக்கு திருவனந்த புரம் அதனை அடுத்து குருவாயூர், கேரளா வின் வர்கலா, கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் என பயணித்து மறுநாள் காலை 7:40 மணிக்கு குருவாயூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் குரு வாயூரில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப் பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு நாகர்கோ வில் வந்தடைந்து இரவு 8.45 மணிக்கு சென்னை வந்து சேரும். திருவனந்தபுரம் தண்டவாள பராமரிப்பு பணிகள்: இந்நிலையில் தற்போது திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சென்னை யில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16127 வரும் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையும், 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 29 மற்றும் 30ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கூவம் ஆற்றில் பெண் சடலம்
அம்பத்தூர், அக். 12- திருவேற்காடு நகராட்சி காடுவெட்டி சுந்தர சோழ புரம் வழியாக கூவம் ஆறு செல்லுகிறது. இந்த ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக அந்த வழியாகச் சென்றவர்கள் திருவேற்காடு காவல் நிலை யத்திற்கு தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையின ரும், பூந்தமல்லி தீய ணைப்பு துறை வீரர்களும் அங்கிருந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்த னர். இறந்து போன பெண் ணுக்கு சுமார் 30 வயதிருக் கும். அவரது உடலின் பல பாகங்களிலும் காயங்கள் இருந்தன. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரமான முறையில் மசாலா பொருட்கள் தயாரிப்பு
சென்னை, அக்.12- இணைய தளங்களை பார்த்து சமையல் செய்ய விரும்புவோர் எண்ணிக்கை அதிரித்து வருவதால் அவர் களுக்கு உதவ சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட மசாலாக்களை அமரா மசாலா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்திய உணவு வகைகளை உடனடியாக சமைக்க பயன்படும் இஞ்சி பூண்டு விழுது, அரைக்கப்பட்ட வெங்காய விழுது, எண்ணையில் பொறித்தெடுக்கப்பட்ட வெங்கயம், அரைக்கப்பட்ட சிகப்பு மற்றும் பச்சை மிளகாய் விழுது, கோழி மற்றும் ஆட்டுக்கறி மசாலா, இறால் பிரியாணி மசாலா, மஷ்ரூம் பிரியாணி மசாலா, சாம்பார், ரசப்பொடி உள்பட பல்வேறு வகையான மசாலாக்களை இந் நிறுவனம் தயாரிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் இதற்காக ஆலை அமைத்துள்ளது. இங்கிருந்து வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம். ஷியாம் கூறினார். இந்நிலையில் சமையல் கலை துறையில் புகழ்பெற்ற கலைஞரான செஃப் தாமுவை தூதராக நியமித் திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக செஃப் தாமு அமரா மசாலாக்களை பயன்படுத்தி உடனடியாக சமைக்கக்கூடிய சைவ, அசைவ உணவு வகைகளை சமைத்து தந்தார்.
நாளை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்
சென்னை,செப்.12- சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் சனிக் கிழமையன்று (செப்.14) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கி றது. அனைத்து பகுதி அலுவ லகங்களில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொது மக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரி விக்க வேண்டும் என குடிநீர் வாரியம் கேட்டுக்கொண் டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள்
இம்மாத இறுதியில் தொடங்கப்படும்
சென்னை, அக். 12- சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையின் 114 ஆண்டுகள் பழமையான கட்டுமானங்களை கொண்ட 2ஆவது ரயில் நிலைய மாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக, உலகத்தரம் வாய்ந்த கட்ட மைப்புடன், விமான நிலையம் போன்ற வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரூ.734 கோடியே 91 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத் திற்கு விடப்பட்டு இந்த மறுசீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிகள் 2026ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில் நிலை யத்தை ஒட்டியவாறு புதிய கட்டு மான பணிகளுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வரு கிறது. மொத்தம் உள்ள 13 துணை பணிகளில் 4 பணிகள் தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது: எழும்பூர் ரயில் நிலையத்தில் பல அடுக்குகள் கொண்ட கார் பார்க்கிங், புதிய பார்சல் அலுவல கம், மின் தூக்கிகள் போன்ற 13 துணை திட்டப் பணிகள் மேற் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதில் நான்கு துணை திட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள ஒன்பது துணை திட்ட பணிகளும் இந்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதில் பல அடுக்கு பார்க்கிங் மற்றும் பார்சல் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் முழு வேகத்தில் நடை பெற்று வருகிறது. மெட்ரோ ரயில்நிலையம் இணைப்பு எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்க பாதைகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின்வாரியம், சென்னை மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகரப் போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலை துறை, பசுமை குழு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற துறைகள் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. இதன் மூலம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை எழும்பூர் ரயில் நிலையம் மூலம் பெற முடியும். தமிழ்நாட்டின் முதல் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையத்தை சென்னை எழும்பூரில் அமைக்கும் வகையில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. புதிய பார்சல் அலுவலகம் ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலகம் மற்றும் பயணிகள் வருகைக்கான நடை மேம்பாலத் தின் கட்டுமான பணி ஒரு மாதத்திற் குள் தொடங்கப்படும். இதற்கான வடிவமைப்புகள் நிறைவு பெற்றுள் ளது. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் உள்ளது போன்ற வசதிகளை வழங்குவதே தெற்கு ரயில்வேயின் நோக்கமாகும். இதன் மூலம் சர்வதேச தரத்திற்கு பயணி கள் பயண அனுபவத்தை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: ரூ.1600 கோடி கேட்டு கடிதம்
புதுச்சேரி,அக்.12- “கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் ரூ.1600 கோடி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த இத்திட்டத்தில் பயன் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் விழா வியாழன்று (அக்.12) நடந்தது. துறை இயக்குநர் முத்துமீனா வரவேற்றார். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. காலாப்பட்டின் மிகப்பெரிய குறை இதுதான். பிள்ளைச்சாவடி பகுதிகளில் 2 மீ வரை தண்ணீர் வருகிறது. காலாப்பட்டில் கல் கொட்ட ரூ.56 கோடி செலவிட திட்டமிட்டு விரைவில் பணிகள் முழுவதும் நடந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர் ஆலோசனை கேட்டு பணிகளை துவங்க உள்ளோம். எப்பயனும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் திட்டத்தில் 70 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டன. படிப்படியாக ஒவ்வொரு தொகுதி தோறும் கொடுத்து வருகிறோம். மாதந்தோரும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். கேஸ் சிலிண்டர் மானியம் சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.300-ம், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.150-ம் பதிவு செய்த பயனாளிகளுக்கு 19,100 பேரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம். மேலும், பதிவு செய்து வரும் 40 ஆயிரம் பேருக்கு அடுத்தக்கட்டமாக செலுத்த உள்ளோம். பதிவு செய்யதால் மொத்தம் 1.7 லட்சம் பேருக்கு தரப்படும். சிலிண்டர் மானியம் தர ரூ. 8 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். அதேபோல் 200 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தியுள்ளோம். விபத்து காப்பீடு திட்டம் தொடங்கி விட்டோம். அடுத்த மார்ச் மாதம் வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நான்கு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ரூ.1600 கோடி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கைவிட்டு விட்டோம். அதற்கு பதிலாக இத்திட்டத்தை துவக்க உள்ளோம் என்றார்.
வெடிகுண்டு மிரட்டல்
விழுப்புரம்,அக்.12- விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ளது கிரீன்ஸ் என்கின்ற மகாலட்சுமி பிளாசா. இதில் மிகப்பெரிய வணிக நிறுவனமான இதில் பல்பொருள் அங்காடி, திரையரங்கு, துணிக் கடைகள் ஏராளமான கடைகள் உள்ளது. தினந்தோறும் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து, கிரீன்ஸ் நிறுவனத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். இதனால் அந்த பகுதி பதற்றம் நீடித்தது.
கள்ளக்குறிச்சியில் அண்ணா சைக்கிள் போட்டி
கள்ளக்குறிச்சி அக்.12- மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி அக். 14 அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கவல் தெரிவித்துள்ளார். சைக்கிள் போட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி. கச்சராயபாளையம் சாலை வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைகிறது. போட்டியில் பங்குபெரும் மாணவ, மாணவியர்கள் 13.10.2023 அன்று மாலை 6.10 மணிக்குள் நேரடியாக தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அலுவலக எண் 729900 5768 தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக சான்றிதழ் மற்றும் பரிசு தொகையாக தலா ரூ.5000.தலா ரூ.3000. தலா ரூ.2000 வீதமும்.4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக சான்றிதழ் மற்றும் தலா ரூ.250 வீதம் பரிசுத்தொகை வங்கி மூலமாக வழங்கப்படும்.எனவே அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள்பங்கேற்கும் மாணவர்களின் பள்ளி வயது சான்றிதலுடன் 14.10.2023 சனிக்கிழமை அன்று காலை 6:30 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.