கிருஷ்ணகிரி, டிச.29 - ஓசூர் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் தர்கா பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ளது சந்திராம்பிகை ஏரி. இந்த ஏரி 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பழமையான ஏரியாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த ஏரி ஓசூர் பகுதி நிலத்தடி நீர் மட்ட வளத்துக்கு ஆதாரமாக இருந்தது. விவ சாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், வைஷ்ணவி நகர், தர்கா, அரசனட்டி, கிருஷ்ணா நகர், மாருதி நகர், அண்ணாமலை நகர், ஆனந்த் நகர் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். மெல்ல மெல்ல ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள் முழுமையாக ஆக்கிர மிக்கப்பட்டது. இதனால் நீர்வரத்து முற்றி லும் தடை பெற்ற நிலையில் ஓசூர் நகர், ஏஸ்டிசி அரசு குடியிருப்புகள்,தர்கா, அரசனட்டி பகுதிகளில் உள்ள குடியிருப்பு கழிவு நீர் ஏரிக்குள் விட்டதால் பயன்பாடு குறைந்தது. ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு மாநகரின் மொத்த கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடு கின்றனர். குப்பை, இறைச்சி கடைகள் கோழிக் கழிவுகள் அனைத்தையும் ஏரிக்குள் கொட்டியதால் மாசடைந்து துர்நாற்றம் அடிக்கிறது. ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஏரியை மூழ்கடித்து விட்டது. முன்பெல்லாம் 200 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்தாலே தண்ணீர் நீர் கிடைத்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 1000 அடி ஆழ்துளை கிணறு அமைத்தால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை. நீர் மட்டமும் குறைந்துவிட்டது. இதை நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், கழிவு நீர் கலப்பதையும், குப்பைகள்,கோழி கழிவுகள் கொட்டப்படுவதையும் தடுத்து நிறுத்தி ஏரியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையை முழுமையாக அகற்றி போர்க்கால அடிப்படையில் சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.