சென்னை,ஆக.14-
சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமையும் மழை பெய்தது.
தாம்பரம், குரோம் பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதே போன்று வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக சென்னை நகரின் பல்வேறு பகுதி களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப் பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. இதுதவிர செவ்வாயன்று காலை நகரின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டமாகவும், சில பகுதி களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பாதக தெரி வித்துள்ளது. மாலை அல்லது இரவு வேலையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரி விக்கப்பட்டுள்ளது.