districts

img

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம்

சென்னை, ஜன.31- சென்னை, பள்ளிக்கர ணையில் இயங்கி வரும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை நாட்டில் அதிகரித்து வரும் ‘கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்’ குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்த சைக்கிள் பேரணியை சமீ பத்தில் நடத்தியது.  இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் தடுப்பு ஊசி களை போடுவதற்கான அவ சியத்தை வலியுறுத்தும் நோக்கில் இது நடத்தப்  பட்டது. பேரணியை காவல்துறை கூடுதல் இணை ஆணையர் அனந்த குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவனைகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி. கோவிந்தராஜன், இயக்கு நர்கள் டாக்டர் ஜெயந்தி,  டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி மற்றும் ஆலோசகர் டாக்டர் கே.எம். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.  இந்நிகழ்ச்சியில் டாக்டர் டி.ஜி. கோவிந்தராஜன் பேசுகையில், “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம் பாதிக்கும் நோயாக வளர்ந்துள்ளது. உலக அளவில் இந்நோய் தாக்குதலால் பாதிக்கப் படுவோரில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் உள்ளனர் என்றார்.  டாக்டர் டி. ஜி. சிவ ரஞ்சனி பேசுகையில், ஆரம்பத்திலேயே இந் நோயை கண்டறிந்தால் எளிதில் குணமடைந்து உயி ரிழப்பைத் தவிர்க்க முடியும் என்றார்.  ஒருவேளை முற்றிய நிலையில்  கண்டறியப்பட்டால் கூட, முறையான சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடி யும் என்று அவர் தெரி வித்தார்.