பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியதற்காக மாவட்ட ஆட்சியர் சரயு ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதனை இயக்குனர் மருத்துவர் ராஜாமுத்தையா பெற்றுக் கொண்டார். ஒன்றிய,மாநில அரசுகள் பாராட்டும் விதமாக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் மருத்துவக் கல்லூரியின் அறங்காவலர் மருத்துவர் லாசியா தம்பிதுரை பாராட்டினார்.