districts

img

விசாரணையின்றி சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்க!

சென்னை, அக். 6 - தமிழக சிறைகளில், நீண்ட நாட்களாக விசா ரணையின்றி வைக்கப் பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய  வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலி யுறுத்தி உள்ளது. நலக் குழுவின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு வியாழனன்று (அக்.5) மண்ணடியில் நடைபெற்றது. மாநாட்டில்,  இந்தியாவின் பன்முகத் தன்மையை பிளவுபடுத்தும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர முயற் சிக்கும் பொது சிவில் சட்டத்தை கைவிட வேண் டும்,தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு தேவையான இடங்களில் அடக்கஸ்தலமும் (கபர்ஸ் தான்), கிறித்தவர்களுக்கு கல்லறைகளும் எந்த வித பாரபட்சமும் இன்றி அமைத்து தர வேண்டும், மாதந்தோறும் சிறுபான்மையினர் குறை தீர்ப்பு கூட்டத்தை ஆட்சி யர்கள் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜலாலுதீன் தலைமை  தாங்கினார். அமைப்பின் மாநிலப் பொதுச்செயலா ளர் எம்.ராமகிருஷ்ணன்,  மாவட்ட ஒருங்கிணைப் புக்குழு நிர்வாகிகள் கே.எஸ். சித்திக், சி.மார்ட் டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவராக  பி.கே.மூர்த்தி, செயலாள ராக எம்.ஜலாலுதீன், பொருளாளராக சி.மார்ட்டின்  ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். நூல் வெளியீடு இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னை நகர சிறு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எம்.அபுதாகீர் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘இந்திய ஆன்மீகமும் காவி பிளவு வாதமும்’ எனும் நூலை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஜி.ராம கிருஷ்ணன் வெளியிட்டு பேசினார். நூலை அறிமுகப்படுத்தி சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, யு2 புரூட்டஸ் மைனர் வீரமணி உள்ளிட் டோர் பேசினர். நூலாசிரி யர் எம்.அபுதாகீர் ஏற்பு ரையாற்றினார். வியாபாரி கள் சங்க தலைவர் எம். அருள்தாஸ் நன்றி கூறி னார்.