districts

img

பெண்கல்விக்கு வித்திட்ட வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு நிறைவு விழா

சென்னை, பிப். 25- சென்னை திருமலைப்பிள்ளை சாலையிலுள்ள வித்யோதயா பள்ளி களின் நூற்றாண்டு நிறைவு விழா ஞாயி றன்று (பிப்.25) நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள திருமலைப்பிள்ளை சாலையில் வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு நிறைவு விழா  பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. விழாவில், பள்ளிகளின் தலைவர்  ஜெயந்தி (ஐஏஎஸ்ஓய்வு) வரவேற்புரை யாற்றினார். விழாவில், காபி டேபிள் புத்தகம் என்ற பெயரில் பள்ளிகளின் சிறப்பு கள் குறித்த படங்கள் அடங்கிய புத்த கத்தை, தலைமை விருந்தினர் எம்.கே. நாராயணன் வெளியிட்டதுடன், 11 சிறந்த மாணவிகளுக்கு சான்றிதழுடன் கூடிய ரொக்க பரிசுத் தொகையையும் வழங்கி பேசினார். கடந்த ஆண்டு பள்ளியின் நூற் றாண்டு விழாவை தொடங்கி வைத்து பேசிய, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டா லின் சொன்னதைவிட வேறு எதையும் சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். இந்தப் பள்ளியினு டைய முதல் மாணவி, பள்ளியின் நிறு வனர் எலிசபெத் சொர்ணம் அப்பா சாமி அம்மையாரின் மகள் விமலா அப்பாசாமி. பெண்களை படிக்க வெளி யில் அனுப்பக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்த அந்த காலத் தில் பெண்களுக்காக தனியாகப் பள்ளியைத் தொடங்கி பெரும் புரட்சி யின் அடையாளத்தை உருவாக்கியது வித்யோதயா பள்ளி. அனைவருக்கும் கல்வி வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிச்சயமாக கல்வி வேண்டும். அதே போல், அது மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அது அமைய வேண்டும். அத்தகைய கல்வியை உருவாக்கித் தரக்கூடிய பள்ளியாக இந்தப் பள்ளி அமைந் திருக்கிறது. அந்த வகையில் மாபெரும் அறிவுச் சுரங்கமாக வித்யோதயா பள்ளி இயங்கிக் கொண்டிருப்பது என்பது பெருமைக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது. பள்ளி இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தும் சிறப்பாக இயங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பேசியதாவது: இன்றைய இளம் தலைமுறை யினர் அறிவுரைகள் சொல்வதை விட வும், முன்மாதிரியாக இருப்பதையே பின்பற்றுவதற்கு எடுத்துக்கொள் கிறார்கள். தொழில்நுட்ப உச்சத்தில் வாழும் தலைமுறையாக இளம் தலைமுறையினர் விளங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்றாலும் அதுவே அவர்களுடைய குறிக் கோள்களில் கவனச்சிதறல்களை ஏற்படுத்தவும் செய்கிறது. மாணவி களாகிய நீங்கள் அதனை சரிசெய்து கொண்டு, வாழ்வில் உயர்த்த இடத்தை அடைய வேண்டும் என்றும் நீதிபதி  மஞ்சுளா வலியுறுத்தினார். அஞ்சல் உறை வெளியீடு வித்யோதயா பள்ளியின் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு, சென்னை நகர் மண்டல அஞ்சலகத் தலைவர் ஜி.நடராஜன் பேசினார். நிறை வாக, பள்ளிகளின் தாளாளர் நிரஞ்சனா நன்றி கூறினார். விழாவில், பள்ளியின் வாழ்நாள் உறுப்பினர் பிரபா அப்பா சாமி, பொருளாளர் நாகப்பன், ஆசிரி யைகள், மாணவர்கள் என ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.