districts

img

விடுபட்ட பகுதிகளில் பாதாளச்சாக்கடை மாமன்ற உறுப்பினர் ஆர்.ெஜயராமன் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 2-

       சென்னை மாநகராட்சி, திரு வொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 4-இல் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன் சென்னை பெருநகர மாநகராட்சி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமாரை சந்தித்து மனு அளித்தார்.

   அந்த மனுவில், சென்னை மாநகராட்சி மண்டலம் 1 க்கு உட்பட்ட வார்டு 4இல் ராமநாதபுரம், சண்முகபுரம். கண்ணியலால் லேஅவுட்,  காமராஜ் நகர், கிரிஜா நகர், பஜனை கோயில் தெரு, டி.எஸ்.கோபால் நகர், பூம்புகார் நகர் போன்ற பகுதிகள் மேடான பகுதிகளாக உள்ளன. இதனால் தண்ணீர் அழுத்தம் குறைவாக வரு வதால் பல நாட்கள் இப்பகுதி களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

   மேலும் ஒருநாள் விட்டு ஒருநாள் 1 மணிநேரம் மட்டுமே வழங்கப் படுகிறது. இதுவும் சரியாக கிடைக்காத நிலை உள்ளதால் மேடான பகுதிகளில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யும் விதத்தில் பூஸ்டர் அல்லது வால்வுகள் அமைக்க வேண்டும்

    வி.பி.நகர், ராமநாதபுரம் 1ஆவது குறுக்கு தெரு. 10ஆவது தெரு விரிவாக்கம், மேட்டுத்தெரு 1ஆவது குறுக்குத்தெரு, திருவீதி யம்மன் நகரில் விடுபட்ட தெருக்கள், ஆதி திராவிடர் காலனி, பெருமாள் கோவில் தெரு விடுபட்டுள்ள பகுதிகள், ஜோதி நகர் 10ஆவது தெரு, ஜோதி நகர் விரிவாக்கம், டி.எஸ்.கோபால் நகர் கிழக்கு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் அகற்றுவதற்கான பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை. இந்த பகுதிகளில் கழிவு நீர் தொட்டி கள் அமைக்கப்பட்டுள்ளன. இத னால் நிலத்தடி நீர் மாசடைகிறது. எனவே இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை தொட்டிகளில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. உடனடியாக சரி செய்வதற்கு தேவையான ஊழி யர்கள் இல்லை. இதனால் பல தெருக்களில் அடிக்கடி கழிவுநீர் சாலைகளில் பாய்ந்தோடும் நிலை உள்ளது.  இதனால் கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உட னுக்குடன் அடைப்புகளை நீக்க தேவையான ஊழியர்களை நிய மித்து கழிவு நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து பகுதி பொறியாளர், தலைமை பொறியாளர் ஆகி யோர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

   இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட நிர்வாக இயக்குநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.

   இச்சந்திப்பின் போது கண்ணி யலால் லேஅவுட் தலைவர் சட கோபன், காமராஜ் நகர் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், வி.பி. நகர் செயலாளர் ராமமூர்த்தி, பொன்ராஜ், இளங்கோ, சிபிஎம் பகுதிக் குழு உறுப்பினர் வெங்கடைய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.