விழுப்புரம், ஜூன் 19-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற் குட்பட்ட மானூர் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மானூர் கிராமத்தைச் சேர்ந்த விடு தலை சிறுத்தை கட்சியின் மயிலம் தொகுதி செயலாளர் செல்வசீமான், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அ.கண்ணதாசன், திண்டிவனம் பால.சாக்ரடீஸ், வழக்கறிஞர் அறவாழி, அம்பேத் வளவன், கார்த்திக்,வேலுவின், பாலு உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு கொடுத்தனர்.
மானூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் நாடக மேடை பகுதியில் சுமார் 1600 பேர் குடியிருந்து வருகின்றனர். அங்கு, பொது மக்கள் 16 மணி நேரம் அமர்ந்து பேசும் ஆலமரகட்டை உள்ளது.
அதிக பொது மக்கள் குடியிருக்கும் பகுதி யில் செல்போன் கோபுரம் கட்டுவதால் இயற்கை பேரிடர் காலத்தில் காற்றும் மழையும் புயலும் இடியும் அதிகமான வெப்ப சூழலில் மின்சாரம் தீ பற்றி எரியும் சூழல் ஏற்படும். எனவே, உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் புற்று நோய், இதயக்கோளாறு, தலைவலி, உடல் ஊனம் ஏற்படுதல் கர்ப்பிணி கள், இளம் குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, செல்போன் கோபுரத்தால் கிராமத்திற்கு பேராபத்து ஏற்படும். ஆகவே, கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி, சுகாதாரத்தோடும் உயி ருக்கு ஆபத்து இல்லாமல் அச்சமின்றி வாழ்வதற்கும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்திருந்தனர்.