காலாவதியான மருந்துகளை விற்ற பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு சென்னை, ஜூலை 5 - காலாவதியான மருந்து விற்றதாக தென்சென்னை பாஜக மாவட்ட தலை வர் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகத்தை சைதாப்பேட்டையில் காளி தாஸ் நடத்தி வருகிறார். கடையில் காலாவதியான மருந்துகள் விற்பதாகவும் விதிமீறல் நடப்பதாகவும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பல புகார்கள் வந்தன. அதன்பேரில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காலா வதியான மருந்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காளிதாஸ், அவரது மனைவி சுமதி மீது சைதை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, சைதாப் பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராக வேண்டிய நிலையில், இருவரும் ஆஜராக வில்லை. இதனால் வழக்கு ஜூலை 29ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் இருவரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.