விழுப்புரம், ஏப். 1- விழுப்புரம் மாவட்டம், முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி சனிக்கிழமை (ஏப். 1) ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகை யில், “இங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சிகிச்சை பெறு கிறார்கள். எனவே தினசரி ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே ஆகிய வற்றின் அறிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். இதயம், சிறு நீரகம் போன்ற உயர் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தினசரி மருத்துவமனைக்கு வர வேண்டும்” என்றார். மருந்து மற்றும் மாத்திரைகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்பாராத விதமாக உடல் பரிசோதனை கருவிகள் பழுதடைந்தால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுழற்சி முறை யில் மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவதோடு, தேவைப்படு வர்களுக்கு உயர்தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா அரசி, மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.