districts

img

கஞ்சா சாக்லேட் கடத்திய பீகார் வாலிபர் கைது

அம்பத்தூர், ஜூலை 15-

    செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

   அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் அஞ்ரய் சடா (19) என்பதும், பீகார் மாநிலம் பஹொரா பஜாரில் கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரிய வந்தது.

   மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 14 கவர்களில் 3 கிலோ 80 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்ததும், 1 கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது.

   இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து, பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.