புதுச்சேரி, ஜூன் 25- மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் கொட்டும் மழையில் மெழுகுவர்த்தி ஏந்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி வில்லியனூர் தென் கோபுரவீதியில் நடைபெற்ற போராட்டத் திற்கு சிபிஎம் வில்லியனூர் இடை கமிட்டி செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின்துறை தனியார் மய மாக்கும் நடவடிக்கை புதுச் சேரி அரசு கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து இந்த அறவழிப் போராட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப் பினர்கள் தமிழ்ச்செல்வன், சத்யா, மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து இடைக்குழு உறுப்பினர்கள் மணிபாலன், மலர்விழி, மங்களலட்சுமி இன்னரசு, மூத்த உறுப்பினர்கள் நமச்சிவாயம், நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.