சென்னை, ஜூலை 29 -
13 ஓட்டுநர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக சிஐடியு தலைவர்களிடம் காவல் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
நுங்கம்பாக்கம் போக்கு வரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விதிக்கு புறம்பாக ஆன் லைன் அபராதம் விதிப்ப தாகவும், லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது. இதனை கண்டித்து சனிக்கிழமை யன்று (ஜூலை 29) காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்த ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் ஆகிய அமைப்பு களை சேர்ந்தவர்கள் திரண்டனர்.
இதனையடுத்து, ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே. முருகேஷ், பொதுச் செயலாளர் எம்.உதயகு மார், மாவட்டத் துணைச் செயலாளர் தி. சிவக்குமார், பொருளாளர் எம்.முரளி உள்ளிட்டோரை அழைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, 13 ஓட்டு நர்கள் மீதான ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்வதோடு, காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சூளைமேட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று காவல்துறை அதி காரிகள் உறுதி அளித்த னர். இதனால் ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்ட னர்.