districts

செவிலியர் நுழைவுத் தேர்வை ரத்து செய்க புதுவை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி,ஜூன் 17-

       செவிலியர் நுழைவுத் தேர்வு அறி விப்பை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது:-

     புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநரகம் நடப்பு ஆண்டு (2023-24) முதல் பிஎஸ்சி செவிலியர் பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடை பெறும் என்ற அறிவிப்பு வெளியிட்டி ருக்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

    நடப்பாண்டு செவிலியர் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்து கலந்தாய்வு தரவரிசை பட்டியலுக் காக மாணவர்கள் எதிர்பார்த்து காத்தி ருக்கின்றனர். இந்நிலையில், ஜூன் 16 அன்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநரகம் செவிலியர் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த தேர்வு முறை 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத்திலிருந்து கேள்விகள் வரும் என்றும் வெளிப்படை தன்மையோடு தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     திடீரென தன்னிச்சையாக வெளிப் படையான விவாதம் இன்றி நுழைவு தேர்வை மாணவர் மீது திணிப்பது வெளிப்படையான நிர்வாக நடை முறையாக இருக்க முடியாது. என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு இப்பிரச்சனையை வேடிக்கை பார்க்கிறது. இதனால் மாண வர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதன் தொடர் விளைவுகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள்தான் முழு பொறுப்பாகும்.

     ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் அனை வருக்குமான வாய்ப்பை மறுப்பது ஒன்றே பாஜக அரசின் செயல்பாடாக இருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சியில் முன்னேறிய முற்போக்கான சமூ கத்தை கட்டமைக்க கூடிய கல்வி மீது இடைவிடாது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.  

    நடப்பாண்டு 10,12 ஆம் வகுப்பு தவிர மத்திய கல்வி வாரியத்தின் கீழான சிபிஎஸ்இ கல்வி மற்றும் கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கை அமலாக்க நடவடிக்கைகள் தீவிரம் எடுத்துள்ளன. அந்த வகையில் பிஎஸ்சி நர்சிங் பிரிவு மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வின் அடிப்படையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயலை கடுமையாக எதிர்க்கிறோம்.

    எனவே மாநில அரசு, நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் புதிய கல்விக் கொள்கை அமலாக்கம், சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக்கம் குறித்தும் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்களுடன் முதலமைச்சர் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

   இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.