districts

img

பூட்டி வைக்கப்பட்டுள்ள கழிப்பறை திறக்கப்படுமா?

தியாகராய நகர்பேருந்து நிலையத்தில் கழிப்பறைவளாகம் 15 நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு தினமும் வரும் பத்தாயிரக்கணக்கான பயணிகள் குறிப்பாக ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் சிறுநீர் கழிக்க முடியாமல்  கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே கழிப்பறை வளாகத்தை உடனடியாக திறந்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.