சென்னை, நவ. 11 - ஒன்றிய பாஜக அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் வஞ்சக திட்டத்தை எதிர்த்து ஞாயிறன்று (நவ.10) மத்தியசென்னை மாவட்டம் முழுவதும் கருத்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் திட்டங்களை விமர்சித்தும், மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தியும் இந்த பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. இதற்கான பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நவ.10 அன்று நடைபெற்றது. கலைக் குழுக்களின் இசை யோடு, வாகன பிரச்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் சென்றது. சேப்பாக்கம்-திரு வல்லிக்கேணி பகுதியில் பிரச்சாரத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துறைமுகம் பகுதி யில் பிரச்சாரத்தை மாநிலக் குழு உறுப்பினர் கே.திருச் செல்வனும் தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பினர் வே.தனலட்சுமி, பகுதிச் செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எழும்பூர் பகுதிச் செய லாளர் வே.ஆறுமுகம் தலைமையிலான பிரச்சாரத்தை செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி முன்னிலையில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். வில்லிவாக்கம் பகுதியில் மாநிலக்குழு உறுப்பி னர் வெ.ராஜசேகரன் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க, செயற்குழு உறுப்பி னர் கே.முருகன், பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். அண்ணாநகர் பகுதி யில் மாவட்டக்குழு உறுப்பி னர் ப.சுந்தரம், பகுதிச் செயலாளர் கே. மகேந்திர வர்மன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தை முன்னெ டுத்துச் சென்றனர். ஆயிரம் விளக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். செயற்குழு உறுப்பி னர் எஸ்.வி.வேணு கோபாலன், பகுதிச் செயலாளர் வெ.இர வீந்திரபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிளைகள் வாரியாக மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன.