districts

img

தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிரச்சாரம்

தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  அந்தோணி ராஜ் தலைமையில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர் .பெருமாள் சாமி, செய்யாறில் சத்தியபாமா தலைமையில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில பொருளாளர் க. ஜோதி பாபு,  போளூரில் ம. தட்சிணாமூர்த்தி தலைமையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ச.டேவிட் ராஜன்,  ஆரணியில் ஜி. முருகன் தலைமையில், மாவட்ட துணை தலைவர் மனோகரன்,  செங்கத்தில் பிலோமினாள் தலைமையில் செங்கம் கல்வி மாவட்ட தலைவர் பா முருகன் உள்ளிட்டோர் பிரச்சார உரையாற்றினர்.