ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத தேச விரோத கொள்கைகளை கண்டித்து 7ஆம் தேதி நடக்கவிருக்கும் மறியல் போராட்டத்தை விளக்கி கிருஷ்ணகிரி, ஓசூர் மாநகர் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.கே நஞ்சுண்டன், மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் பிரச்சார இயக்கத்திற்கு தலைமை தாங்கினர். ஓசூரில் 12 இடங்களிலும் கிருஷ்ணகிரியில் ஆறு இடங்களிலும் பிரச்சாரம் நடைபெற்றது.