ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச்செயலாளர் எஸ்.பவானி, கிளைச் செயலாளர், எஸ்.பாப்பூ வெங்கட் (கட்டுமானம்), எம்.எஸ்.ஜூகைப் (வாலிபர் சங்கம்) ஆகியோர் பேசினர்.
மக்கள் விரோத ஒன்றிய அரசின் செயல்பாடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் கிளர்ச்சி பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு நகரத்தில் நகர செயலாளர் என்.அன்பு தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், பகுதி செயலாளர். கே.வேலன், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.