நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்வுகாண அழைப்பு
நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்வுகாண அழைப்பு திருவள்ளூர், ஜூலை 3- திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் வருமாறு, திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு முன்போ அல்லது இணையதள வசதி மூலமாகவோ தொடர்பு கொண்டு நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமுறையில் குறைந்த செலவில் தீர்வு காணலாம். சம்பந்தப்பட்ட விவரங்களை தங்களது அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட உதவி மையத்தில் தெரிவிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினை, 044 27660120 என்ற dlsatiruvallur1@gmail.com மூலமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உதவி எண் 044 25342441 மூலமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்ற உதவியாளர் கைது
லஞ்சம் பெற்ற உதவியாளர் கைது கடலூர், ஜூலை 3- துப்புரவு பணியா ளருக்கு சம்பள நிலுவைத் தொகை வழங்க லஞ்சம் கேட்ட நகராட்சி உதவி யாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2013ஆம் தேதி முதல் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்க கோரியும், பத்தாண்டு காலம் பணி நிறைவு செய்ததால் தேர்வு நிலை பணியாளராக நியம னம் செய்து ஊதிய உயர்வு அளிக்கும்படி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுத்து நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு அளிக்க பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் பிரிவில் உதவியாளராக இருக்கும் கதிரவன் (வயது 55) என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள் ளார். பணம் கொடுக்க விருப்பமில்லாத காரணத்தி னால் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்ததை அடுத்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். புதன்கிழமை லஞ்சமாக 5 ஆயிரம் ரூபாயை வெங்கடேசன் கதிரவனிடம் கொடுக்கும் போது ஏடிஎஸ்பி தேவநாதன் தலை மையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
பதவி வெறியில் தில்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள்!
பாஜக தலைமை மூலம் ரங்கசாமிக்கு நிர்பந்தம் ஏற்படுத்த முயற்சி
புதுச்சேரி, ஜுலை 3- தில்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி பாஜக எம்எல்ஏ-க்கள் பாஜக முக்கியத் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது முதல்வர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து அவரது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரு கிறது. முன்னதாக சட்டப் பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் வென்றது. அதை யடுத்து மூன்று நியமன எம்எல்ஏக் களை பாஜக நியமித்தது. 3 சுயேச்சைகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதற்காக அவர்களுக்கு பல உத்தரவாதங்களும் தரப்பட்டன. இந்த நிலையில் அமைச்சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வாரியத் தலைவர் பதவி கேட்டனர். பின்னர் அமைச்சர் பதவியும் கேட்டும் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்த னர். ஆனால் கூட்டணியின் தலை வரும் முதல்வருமான ரங்கசாமி இக்கோரிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் மவுனமாகவே இருந்து வந்தார். மூன்றாண்டுகள் ஆட்சி நிறை வடைந்த நிலையில், மக்க ளவைத் தேர்தலில் பாஜக புதுச்சேரியில் தோல்வியடைந்தது. இத்தோல்விக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான ரங்கசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுநர் மாளிகைக்கே சென்று ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனுவாக அளித்தனர். அவர்களுடன் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-க்களும் சென்றனர். ஆனால், அது தொடர்பான புகைப்படங்களை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் வெளியிடவில்லை. ஆனால், ஆளுநரிடம் நேரடியாகவே குற்றம் சாட்டிய ஆடியோ பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-வான அங்காளன் மூலமாக வெளியானது. அதில், முதல்வர் தங்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை. அதிகளவில் ரெஸ்டோ பார்கள் திறந்ததில் ஊழல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அந்த ஆடியோ மூலமாக வெளியானது. பாஜக மாநிலத் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியாலும் பாஜக எம்எல்ஏ-க்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்விவகாரங்கள் தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலை யில் பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், வெங்கடேசன், பாஜக ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், சிவ சங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் தில்லிக்குச் சென்றுள்ளனர். செவ்வாய்கிழமை மக்களவைக் கூட்டம் நடந்ததால் யாரையும் சந்திக்கவில்லை. புதன்கிழமை இரவு சந்தித்துப்பேசினர். புதன்கிழமை அவர்கள் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்து முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி பற்றியும் புதுச்சேரியில் நிலவும் சூழல் தொடர்பாகவும் பாஜக தலை வர்களிடம் புகார் தெரிவித்தனர். முக்கியமாக முதல்வர் ரங்கசாமி யின் செயல்பாட்டால் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, தோல்வி மற்றும் ரெஸ்டோ பார் அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பியும் தில்லி சென்றுள்ளார். அவரிடம் இதுபற்றி கேட்டதற்கு, “நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்தேன். ஆளுநரைச் சந்திக்க உள்ளதை முன்பே என்னிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் தெரிவித்தனர். ஆனால், முதல்வரை பற்றி புகார் தெரிவிக்கச் செல்வதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை என்றார். உண்மை நிலவரம் அறிய கட்சி மேலிடம் உரிய பொறுப்பாளர்களை புதுச்சேரிக்கு அனுப்பும். அவர்கள் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவை மேற்கொள்வார்கள். ஏற்கெனவே முதல்வர் ரங்கசாமியை இதுதொடர்பாக சந்தித்துப் பேசியபோது அவர் தெரிவித்த கருத்துகளையும் கட்சி மேலிடத்துக்கு தாம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.